ஓவல் டெஸ்டில் இந்தியா வெற்றி; பிரதமர் மோடி பாராட்டு

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது.

Update: 2021-09-06 17:32 GMT
புதுடெல்லி,

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு  பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல், தடுப்பூசிகள் இன்று 1 கோடிக்கு மேல் போடப்பட்டு சாதனை படைத்துள்ளதற்கும் பாராட்டு தெரிவித்து தனது டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடி தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:- “ தடுப்பூசி  செலுத்தும் பணியிலும் & கிரிக்கெட் மைதானத்திலும் மீண்டும் மிகச்சிறந்த நாள்.  எப்போதும் போல இந்தியா வெற்றி பெற்றுள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இன்று போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 1,08,36,984 -கோடியை தாண்டியுள்ளது. கடந்த 11 நாட்களில் 3-வது முறையாக 1 கோடியை தாண்டி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்