மேற்கு வங்காளத்தில் மேலும் 503 பேருக்கு கொரோனா தொற்று

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 503 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-06 22:31 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் மேலும் 503-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்புக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிசையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 8,480- ஆக உள்ளது. 

கொரோனா மீட்பு விகிதம் 98.26 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய சுமார்  26 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் தொற்று பாதிப்பு லேசாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் 712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்