காஷ்மீரில் போலீசார் சோதனையில் ஒருவர் கைது; சீன எறிகுண்டுகள் பறிமுதல்
காஷ்மீரில் போலீசார் மற்றும் ராணுவ கூட்டு நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டு சீன எறிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிர்னி பகுதியில் போலீசார் மற்றும் ராணுவம் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 4 சீன எறிகுண்டுகள், தோட்டாக்களுடன் கூடிய 2 பிஸ்டல்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து அந்நபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.