கர்நாடகாவில் மேலும் 851- பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 851-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-07 16:51 GMT
பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கணிசமாக கட்டுக்குள் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 851 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து 790-பேர் குணம் அடைந்த நிலையில் 15 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,432 ஆக உள்ளது. 

கர்நாடகாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 02 ஆயிரத்து 089- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,441 ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்