கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் புதிதாக உயிரிழப்பு இல்லை

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நேற்று தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

Update: 2021-09-07 18:45 GMT
லக்னோ, 

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறுதல் அளிக்கும் விதமாக தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.  

தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 227- ஆக உள்ளது.  உத்தர பிரதேசத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  17,09,479 - ஆக உயர்ந்துள்ளது. 

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நேற்று தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்