ரஷிய நாடாளுமன்ற தேர்தலுக்காக கேரளாவில் வசிக்கும் ரஷியர்கள் ஓட்டு போட்டனர்

ரஷிய நாடாளுமன்ற தேர்தல், வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, கேரளாவில் வசிக்கும் ரஷிய நாட்டு வாக்காளர்கள் நேற்று ஓட்டளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-09-12 20:52 GMT
 அதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள ரஷிய துணை தூதரகத்தில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. காலை 11 மணி முதல் பகல் 2 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கேரளாவில், ரஷியாவை சேர்ந்த 25 வாக்காளர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் வாக்களித்தனர்.

மேலும் செய்திகள்