டெல்லி திகார் சிறையில் கைதிகள் மோதல்

டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-09-12 22:37 GMT


புதுடெல்லி,

டெல்லி திகார் சிறையில் கைதிகள் சிலர் திடீரென ஆயுதங்களை கொண்டு ஒருவருக்கு ஒருவர் மோதி கொண்டனர்.  இந்த சம்பவத்தில் 2 பேர்
காயமடைந்துள்ளனர்.

திகார் சிறையில் 3வது பிரிவில் நடந்த மோதல் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மோதலில் காயமடைந்த கைதிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  சிகிச்சை முடிந்து  அவர்கள் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்