கொரோனா தடுப்பூசி எண்ணிகை 75 கோடி; பிரதமர் மோடிக்கு யோகி ஆதித்யநாத் புகழாரம்

கொரோனா தடுப்பூசி எண்ணிகை 75 கோடியை கடந்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு உத்தர பிரதேச முதல் மந்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2021-09-13 22:51 GMT
லக்னோ,

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிகை 75 கோடியை கடந்துள்ளது.  இந்நிலையில், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, பிரதமர் மோடி தலைமையின் கீழ் கோவிட் மேலாண்மையில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது.

நாட்டில் 75 கோடி பேருக்கு வெற்றி அடைந்துள்ளது.  பிரதமரிடம் இருந்து ஊக்கம் பெற்று உத்தர பிரதேத்தில் இதுவரை 9 கோடி பேர் கெரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர் என்று யோகி புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்