மேற்குவங்காளம்: 130 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

மேற்குவங்காளத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-09-14 01:54 GMT
கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளுடன் 130 குழந்தைகள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை உருவாக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், அவசியம் ஏற்படும் பட்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 130 குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்