உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆட்சி நிர்வாகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், முதல் மந்திரி யோகி ஆதித்நாயத்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்

Update: 2021-09-14 11:59 GMT
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், முதல் மந்திரி யோகி ஆதித்நாயத்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இரட்டை  இயந்திர அரசாங்கத்தால் இரு மடங்கு பலன்கள் கிடைப்பதற்கு உத்தர பிரதேசம் மிகச்சிறந்த உதாரணம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “ நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக கருதப்பட்ட  ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட உத்தர பிரதேசம் தற்போது நாட்டின் மிகப்பெரும் வளர்ச்சி பிரசாரத்துக்கு தற்போது  முன்னணியில் இருப்பது மிகப்பெரும் திருப்தி அளிக்கிறது” என்றார். 

மேலும் செய்திகள்