டி.ஜி.பி.யிடம் சரண் அடைந்த பெண் மாவோயிஸ்டு

தெலுங்கான மாநில போலீஸ் டி.ஜி.பி. மகேந்தர் ரெட்டி முன்னால் நேற்று அம்மாநிலத்தை சேர்ந்த ஜக்கரி சமக்கா என்கிற சாரதா என்ற பெண் மாவோயிஸ்டு சரண் அடைந்தார்.

Update: 2021-09-17 23:15 GMT
ஐதராபாத், 

தெலுங்கான மாநில போலீஸ் டி.ஜி.பி. மகேந்தர் ரெட்டி முன்னால் நேற்று அம்மாநிலத்தை சேர்ந்த ஜக்கரி சமக்கா என்கிற சாரதா என்ற பெண் மாவோயிஸ்டு சரண் அடைந்தார்.

அவர் உடல் நல பிரச்சினைகள் மற்றும் மாவோயிஸ்டு சிந்தாந்தின் மீதான நம்பிக்கை இழப்பு காரணமாக சரணடைந்து உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜக்கரி சமக்கா மாவோயிஸ்டு தலைவர் ஹரிபுஷன் என்பவரின் மனைவி ஆவார். ஹரிபுஷன் கொரோனா காரணமாக கடந்த ஜூன் மாதம் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்