அசாமில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அசாம் மாநிலத்தில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-18 03:13 GMT
கவுகாத்தி,

அசாமில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, அசாமில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது.
 
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 818 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 477 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அசாமில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்தனர். இதனால், அசாமில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்