மத்திய பிரதேசத்தில் போலியான பான், வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்த 2 பேர் கைது

மத்திய பிரதேசத்தில் பான், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-09-18 08:06 GMT
இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் போலியான வாக்காளர் அடையாள அட்டைகள், ஆதார் அட்டைகள், பான் அட்டைகள், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் வேறு சில ஆவணங்களை சிலர் தயாரித்து வருகின்றனர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இதில், 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.  அவர்களிடம் இருந்து கணினி, பிரின்டர் மற்றும் ஸ்கேனர் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.  இதுதவிர போலி ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்