நாட்டில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் எண்ணிக்கை 80 கோடியை தாண்டியது
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80.33 கோடியை எட்டியுள்ளது. கடந்த 11 நாள்களில் மட்டும் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்ததற்கு மருத்துவப் பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்தாா்.