ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளார்- சித்து பாராட்டு

தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்முறையாக முதல் மந்திரியாக்கி ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளதாக சித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-20 13:00 GMT
அமிர்தசரஸ்,

தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்முறையாக முதல் மந்திரியாக்கி ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளார் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். இது குறித்து சித்து கூறியிருப்பதாவது:- பஞ்சாபில் முதல் தலித் சீக்கியரை முதல் மந்திரியாக்கி ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளார். 

ஓர் சிறப்பான நபர் இன்று முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார். பொதுமக்களின் நலன் சார்ந்த பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். மின்சாரக் கட்டண தள்ளுபடி உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும்” என்றார். 

மேலும் செய்திகள்