நாடு முழுவதும் செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் 81.85 கோடி

இந்தியாவில் இதுவரை 81.85 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

Update: 2021-09-21 05:38 GMT



புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகின்றன.  கடந்த ஜனவரியில் தொடங்கிய இந்த பணியில் முன்கள மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

தொடர்ந்து கடந்த ஜூனில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி அளித்தது.  நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 96,46,778 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.

நாட்டில், இதுவரை மொத்தம் 81.85 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.  தமிழகத்தில் இதுவரை 4,32,10,314 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்