மும்பையில் நேற்று 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பையில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி உள்ளது.

Update: 2021-09-21 21:46 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 24 ஆயிரத்து 907 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 352 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் தொற்றுக்கு பலியானார். நகரில் இதுவரை 7 லட்சத்து 38 ஆயிரத்து 876 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 59 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதித்தவர்களில் 97 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர்.

நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 1,177 நாட்களாக உள்ளது. தற்போது 4 ஆயிரத்து 583 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மும்பையில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. அதாவது 1 கோடியே 18 ஆயிரத்து 770 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்