அசாமில் ஒரே நாளில் 453 நிலத்தரகர்கள் அதிரடி கைது

அசாமில் ஒரே நாளில் 453 நிலத்தரகர்கள் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-09-22 00:28 GMT
கவுகாத்தி, 

அசாம் மாநிலத்தில் சட்டவிரோத நிலத்தரகு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 453 நிலத்தரகர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், ‘மாநிலத்தில் இடைத்தரகர்கள் ராஜ்ஜியத்தை ஒழிக்கும்விதமாக சட்டவிரோத நிலத்தரகு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அலுவலகங்களில் பொதுமக்களை தொந்தரவுபடுத்தும் இடைத்தரகர்களின் செயல்பாடு முடிவுக்கு வர வேண்டும். அதற்காக அவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் பேசிய முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் செயல்பட அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது, பொதுமக்களும் சில நாட்கள் பொறுத்திருந்திருந்து முறைப்படியே தங்கள் பணிகளை முடித்துக்கொள்ள வேண்டுமே தவிர, இடைத்தரகர்களை நாடக்கூடாது’ என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்