மும்பை: ரூ.18 கோடி ஹெராயின் கடத்தல்; பெண் விமான பயணி கைது

மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய பெண் பயணியிடம் இருந்து ரூ.18 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-09-24 11:59 GMT




மும்பை,

மராட்டியத்தின் மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த விமானத்தில் விமான உளவு பிரிவு அமைப்பினர் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையிலான பெண் ஒருவர் பிடிபட்டார்.

40 வயது மதிக்கத்தக்க அவரிடம் இருந்து ரூ.18 கோடி மதிப்பிலான 3.584 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் ஜாம்பியா நாட்டில் இருந்து வர்த்தக சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.  சிலுபியா செகேதி என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.  தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.



மேலும் செய்திகள்