அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு
அருணாச்சல பிரதேசத்தில் பான்கின் பகுதியில் மிதமான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது.
இடாநகர்,
அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை 10.11 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள பான்கின் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.