கல்வி பணிக்கான ஒவ்வொரு முயற்சியாலும் நாட்டின் எதிர்காலம் வடிவமைக்கப்படும்; பிரதமர் மோடி பேச்சு
கல்வி பணிக்கான ஒவ்வொரு முயற்சியாலும் நாட்டின் எதிர்காலம் வடிவமைக்கப்படும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம். இதன்படி அவர் இன்று பேசும்போது, கொரோனா காலத்தில், உத்தர பிரதேசத்தில் ஒரே ஆசிரியர் ஒரே அழைப்பு என்ற திட்டத்தின் கீழ் மாற்று திறனாளி குழந்தைகள் நலன் பெற்று உள்ளனர்.
இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பள்ளி முதல்வரான தீபமாலா பாண்டே தலைமையிலான ஆசிரியர் குழுவுக்கு பாராட்டுகள். அவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மாற்று திறனாளி மாணவர்களை கல்வி கற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். இந்த உயரிய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
இதுபோன்ற கல்வி பணிக்கான ஒவ்வொரு முயற்சியாலும் நாட்டின் எதிர்காலம் வடிவமைக்கப்படும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.