கர்நாடகாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்; 2 ஈரானியர்கள் கைது
கர்நாடகாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்து 2 ஈரானியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகாவின் பிடாடி நகர் அருகே குடியிருப்பு ஒன்றில் சட்டவிரோத வகையில் ஈரான் நாட்டை சேர்ந்த 2 பேர் தங்கியிருந்து உள்ளனர். அவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர் என மத்திய குற்ற பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் நடந்த சோதனையில், அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள மரிஜுவானா என்ற போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். 130 மரிஜுவானா செடிகள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றையும் கைப்பற்றி உள்ளனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.