ஆந்திர பிரதேசம்: 1,710 கிலோ போதை பொருள் பறிமுதல்
ஆந்திர பிரதேசத்தில் 1,710 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் சிந்தப்பள்ளி மண்டல் பகுதியில் லொத்துகெடா கிராமத்தில் 1,710 கிலோ எடை கொண்ட போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஒடிசாவை சேர்ந்த 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசாவை சேர்ந்த மற்றொரு நபரும் கைது செய்யப்படுவார் என போலீசார் கூறியுள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.