உத்தர பிரதேசத்தில் பேருந்து, லாரி மோதல்; 5 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் பேருந்து மற்றும் லாரி மோதி கொண்டதில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பாரபங்கி,
உத்தர பிரதேசத்தின் பாரபங்கி நகரில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில், பேருந்து மற்றும் லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.