கர்நாடகாவில் 340 கிலோ போதை பொருள் கடத்தல்; 3 பேர் கைது

கர்நாடகாவில் 340 கிலோ எடை கொண்ட போதை பொருளை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2021-10-09 01:08 GMT
கலபுரகி,

கர்நாடகாவின் கலபுரகி நகரில் சோதனை சாவடி ஒன்றில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்த நிலையில் வாகனம் ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் வந்துள்ளது.

அதனை போலீசார் நிறுத்த முயன்றுள்ளனர்.  எனினும், அந்த வாகனம் நிற்காமல் சோதனை சாவடியை கடந்து சென்றுள்ளது.  இதனால், போலீசார் விரட்டி சென்று அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதன்பின்னர் அந்த வாகனத்தில் நடத்திய சோதனையில் பெட்டி ஒன்றில் இருந்த 170 பொட்டலங்களில் 340 கிலோ எடை கொண்ட போதை பொருளை போலீசார் கைப்பற்றினர்.

வாகனத்தில் இருந்த அக்ரம் (வயது 22), சுமீயர் (வயது 21) மற்றும் மோகன் (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்