அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு

அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-10-09 01:33 GMT
இடாநகர்,

அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் இருந்து வடமேற்கே 80 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 1.24 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்