‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம்; வரும் 18ல் டெல்லியில் மீண்டும் தொடக்கம்

டெல்லியில் ‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம் வருகிற 18ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்படுகிறது.

Update: 2021-10-12 07:59 GMT
புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஆண்டு, சாலையில் சிவப்பு விளக்கு எரியும்போது, வண்டியின் என்ஜினை அணைத்து விடுங்கள் என்ற பொருள்படும் ரெட் சிக்னல், என்ஜின் நிறுத்தம் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டம் வருகிற 18ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்பட உள்ளது.  இதன்படி, ரெட் சிக்னலில் நீங்கள் நின்றவுடன், உங்களுடைய வாகன என்ஜினை நிறுத்தி விடுங்கள்.  இதனை இன்றில் இருந்தே நீங்கள் தொடங்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்