கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-13 13:29 GMT

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,079- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று  பாதிப்பால் ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் 48 லட்சத்து  20 ஆயிரத்து 698- ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,571 ஆக  உயர்ந்துள்ளது. 

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது கவனிக்கத்தக்கது. எனினும், நேற்று 7,823- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய மேலும் 89,995- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்