டெல்லியில் மேலும் 31 பேருக்கு கொரோனா

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது.

Update: 2021-10-13 14:18 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. அங்கு பல மாதங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்க எண்களிலேயே உள்ளது.  டெல்லியில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. தொற்று பாதிப்பு விகிதம் 0.05 சதவிகிதமாக உள்ளது.  

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 39 ஆயிரத்து 283- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,089- ஆக நீடிக்கிறது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 65,548- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்