கர்நாடத்தில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்

கர்நாடக மாநிலத்தில் இன்று ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2021-10-14 17:30 GMT
பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இன்று மாலை 6.21 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்