கோவாவில் 9-12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு அனுமதி
கோவாவில் வருகிற 18ந்தேதியில் இருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
பனாஜி,
கோவா கல்வி இயக்குனர் பூஷண் சவாய்கர் இன்று கூறும்போது, நிபுணர் குழுவுடனான ஆலோசனைக்கு பின்பு பள்ளிகளை மீண்டும் திறப்பது என முடிவானது.
இதன்படி, வருகிற 18ந்தேதியில் இருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது என கூறியுள்ளார்.