உத்தரகாண்டுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை

உத்தரகாண்டில் நாளை கனமழை பெய்யும் என்றும் அதனால், ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

Update: 2021-10-17 08:56 GMT
டேராடூன்,

உத்தரகாண்டில் வருகிற 18ந்தேதி (நாளை) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இதனால், ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, இன்று முதல் வருகிற 19ந்தேதி வரை ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.  இதுபற்றி உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மையம், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்