டெல்லியில் மேலும் 25 பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-20 12:26 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் கட்டுக்குள் உள்ளது. அங்கு பல வாரங்களாகவே தொற்று பதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்க எண்களிலேயே உள்ளது.  ஆறுதல் அளிக்கும் வகையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் நடப்பு மாத்தில் பெருமளவு குறைந்துள்ளது. 

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.  அதேபோல், மேலும்  25 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 37 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 310- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்