காங்கிரஸ் பொது செயலாளர்களுடன் வரும் 28ந்தேதி சோனியா காந்தி ஆலோசனை
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சியின் பொது செயலாளர்களுடன் வருகிற 28ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் அடுத்து வரவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் பொது செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் (பொறுப்பு), கட்சியின் தலைவர்கள் ஆகியோரை கட்சியின் தலைமை செயலகத்தில் சந்திக்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பயிற்சி, உறுப்பினர்களுக்கான திட்டம் மற்றும் தேர்தலை எதிர்கொள்ளும் முறை ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளன.