கொல்கத்தா ரூ.3.23 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள், பணம் பறிமுதல்
கொல்கத்தா சுங்க துறை ரூ.3.23 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில், கொல்கத்தா சுங்க துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அதில், தலா 116 கிராம் எடை கொண்ட 40 தங்க கட்டிகள் மற்றும் 93 லட்சம் மதிப்பிலான பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.23 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.