டெல்லி: பாராளுமன்றத்திற்குள் நுழைய போலி நுழைவு சீட்டு தயாரித்த நபர் கைது

டெல்லியில் பாராளுமன்றத்திற்குள் நுழைய போலி நுழைவு சீட்டு தயாரித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-23 19:43 GMT
டெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்றத்திற்குள் நுழைய நுழைவு சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய தேவையான நுழைவு சீட்டை போலியாக ஒருவர் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக டெல்லி கிரைம் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லோ குமார் ஆரியா என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆரியாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்