பஞ்சாப்பில் மழை சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு அறிவிப்பு

பஞ்சாப்பில் மழையால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கும் என துணை முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-10-24 23:19 GMT

சண்டிகார்,

வடமாநிலங்களில் பருவமழை பொழிவால் கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன.  இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பஞ்சாப்பில் மழையால் ஏக்கர் கணக்கிலான பயிர்கள் சேதமடைந்து உள்ளன.  இதுபற்றி துணை முதல்-மந்திரி ஓ.பி. சோனி கூறும்போது, மழையால் பயிர்களை சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு விரைவில் இழப்பீட்டு தொகையை விடுவிக்கும் என துணை முதல்-மந்திரி என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்