அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

Update: 2021-10-27 02:29 GMT
போர்ட் பிளேர், 

அந்தமான் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. அந்தமானின் திக்லிபூர் பகுதியில்  நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

மேலும் செய்திகள்