மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது

மராட்டிய மாநிலத்தில் தற்போது 19 ஆயிரத்து 480 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2021-10-27 21:21 GMT
மும்பை,

மராட்டியத்தில் நேற்று புதிதாக 1,485 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 38 பேர் உயிரிழந்தனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. அதன்படி 19 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் நேற்று மொத்தம் 39 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 420 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. நகரில் கடந்த 2 நாட்களாக நோய் பாதிப்பு 300-க்கும் குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு 400-ஐ தாண்டியுள்ளது. மும்பையில் மேலும் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்