இடைத்தேர்தல் நடந்த 3 எம்.பி., 29 எம்.எல்.ஏ. தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை

இடைத்தேர்தல் நடந்த 3 எம்.பி., 29 எம்.எல்.ஏ. தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

Update: 2021-11-01 21:52 GMT
புதுடெல்லி, 

தாத்ரா நகர் ஹவேலி, இமாசலபிரதேசத்தில் மண்டி, மத்தியபிரதேசத்தில் காண்ட்வா ஆகிய 3 மக்களவை தொகுதிகளிலும், 13 மாநிலங்களில் இடம்பெற்றுள்ள 29 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த மாதம் 30-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதில் பதிவான ஓட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. இந்திய தேசிய லோக்தளம் தலைவர் அபய் சவுதாலா, முன்னாள் முதல் -மந்திரி வீரபத்ரசிங் மனைவி பிரதிபா சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

மேலும் செய்திகள்