போபாலில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்...!

போபாலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் வார்டில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-11-08 17:58 GMT
போபால், 

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  பல குழந்தைகள் கட்டிடத்தில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அம்மாநில மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்