பாகிஸ்தான் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப விற்பனையாளர் கொலை; காஷ்மீரில் 3 பேர் கைது

காஷ்மீரில் பாகிஸ்தான் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப விற்பனையாளரை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2021-11-23 15:50 GMT


ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் போஹ்ரி கடல் பகுதியில் கடந்த 9ந்தேதி இப்ராகிம் அகமது என்ற விற்பனையாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.  இதுபற்றி காஷ்மீர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, பாகிஸ்தான் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப விற்பனையாளரை கொன்றோம் என கூறியுள்ளனர்.  இவர்கள் அனைவரும் புல்வாமா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் செய்திகள்