தெலுங்கானாவில் சாலை விபத்து; 4 பேர் பலி

தெலுங்கானாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-11-26 19:36 GMT


கரீம்நகர்,


தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் மணிகொண்டூர் கிராமத்தில் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது.  அதிவேகத்தில் சென்ற அந்த கார் திடீரென மரம் ஒன்றின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.  ஒருவர் காயமடைந்து உள்ளார்.  இதனை மணிகொண்டூர் காவல் நிலைய வட்ட ஆய்வாளர் கிருஷ்ணா ரெட்டி உறுதிப்படுத்தி உள்ளார்.  விபத்து பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்