கர்நாடகத்தில் மருத்துவ கல்லூரியில் 182 பேருக்கு கொரோனா

கர்நாடக மருத்துவக்கல்லூரியில் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-11-27 02:49 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் எஸ்.டி.எம். மருத்துவக்கல்லூரி உள்ளது. இங்கு மாணவ-மாணவிகள், மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் என மொத்தம் 690 பேர் உள்ளனர். அவர்களில் நேற்று முன்தினம் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவக்கல்லூரியில் உள்ள மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மேலும் 116 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது நேற்று உறுதியானது. இதன்மூலம் இக்கல்லூரியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்