அசாமில் ரூ.12.96 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்
அசாமில் ரூ.12.96 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை எல்லை பாதுகாப்பு படை பறிமுதல் செய்துள்ளது.
கரீம்கஞ்ச்,
அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் நீலம் பஜார் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான சம்சூன் நூர் என்பவரை பிடித்து எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், அவரிடம் 2,59,200 போதை மாத்திரைகள் இருந்துள்ளன. 32.865 கிலோ எடை கொண்ட அவற்றின் மதிப்பு ரூ.12.96 கோடி என தெரிய வந்துள்ளது. அவற்றை கைப்பற்றி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.