மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 877 பேருக்கு கொரோனா

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 632 பேர் குணமடைந்துள்ளனர்.

Update: 2021-12-16 20:18 GMT
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் இதுவரை கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 46 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 632 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 64 லட்சத்து 95 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்