ஜம்மு- காஷ்மீர்: பல்கலைக்கழகத்தில் 4 நாட்களில் 187 மாணவர்களுக்கு தொற்று..!

ஜம்மு- காஷ்மீரிலுள்ள பல்கலைக்கழகத்தில் 4 நாட்களில் 187 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2022-01-04 21:49 GMT
ஜம்மு- காஷ்மீர்,

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்னம் உள்ளது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தில் கடந்த நான்கு நாட்களில் 187 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழகம் தற்போது மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கவிருந்த பல்கலைக்கழகத்தின் முக்கியத் தேர்வுகள் மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்