அயோத்தி அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-01-07 05:22 GMT
கோப்புப்படம்


அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி அருகே மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கமானது அயோத்தியில் இருந்து 176 கிமீ தொலைவிலும், 15 கிமீ ஆழத்திலும் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்