மும்பை தாராவியில் புதிதாக 147 பேருக்கு கொரோனா

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் மீண்டும் தொற்று பாதிப்புஅதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Update: 2022-01-08 15:47 GMT
மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிடைத்த தகவலின் படி  தாராவியில் புதிதாக 147 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 

 மாகிம் பகுதியில் 274 பேரும், தாதரில் 213 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 3 இடங்களிலும் தற்போது தொற்றினால் பாதிக்கப்பட்ட 729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாராட்டிய மாநிலத்தில் இன்று  41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்