கேரளாவில் மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
இந்தியாவிலும் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கால் பதித்த ஒமைக்ரான் காட்டுத்தீ போல பரவி விட்டது.
திருவனந்தபுரம்,
தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா உலகம் முழுவதும் வியாபித்துவிட்டது. ஏற்கனவே கண்டறியப்பட்ட கொரோனா வகைகளை விட இந்த ஒமைக்ரான் திரிபு அதிவேகத்தில் பரவக்கூடியது என்பதால், மின்னல் வேகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கால் பதித்த ஒமைக்ரான் காட்டுத்தீ போல பரவி விட்டது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கேரளாவில் மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 345 ஆக உயர்ந்துள்ளது.